உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தொடர்ந்து பெய்த மழையால் மானாவாரி துவரை செழிப்பு

தொடர்ந்து பெய்த மழையால் மானாவாரி துவரை செழிப்பு

தொடர்ந்து பெய்த மழையால்மானாவாரி துவரை செழிப்புகிருஷ்ணராயபுரம், அக். 20-மழை காரணமாக, பழையஜெயங்கொண்டம் பகுதியில் மானாவாரி நிலங்களில் துவரை சாகுபடி செழிப்படைந்துள்ளது.கிருஷ்ணராயபுரம் அடுத்த பழையஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி பகுதியில் மானாவாரி நிலங்களில் துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. துவரை செடிகளுக்கு, கடந்த வாரத்தில் பெய்த மழையால் தண்ணீர் கிடைத்துள்ளது. இந்த மழை நீரால், மானாவாரி நிலங்களில் துவரை செடிகள் செழிப்பாக வளர்ந்து வருகிறது. மேலும் தொடர் மழை பெய்தால், செடிகளில் பூக்கள் பூத்து மகசூல் கிடைக்கும். துவரை செடிகளில் ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டுள்ள சோளம் பயிர்களும் செழிப்பாக வளர்ந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை