உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டி.என்.பி.எல்., நிறுவனத்தில்மயங்கி விழுந்த தொழிலாளி பலி

டி.என்.பி.எல்., நிறுவனத்தில்மயங்கி விழுந்த தொழிலாளி பலி

டி.என்.பி.எல்., நிறுவனத்தில்மயங்கி விழுந்த தொழிலாளி பலிகரூர்,:கரூர் அருகே, டி.என்.பி.எல்., (காகித ஆலை) நிறுவனத்தில் மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் முல்லை நகரை சேர்ந்தவர் அறிவுடை நம்பி, 53; இவர், புகழூரில் உள்ள டி.என்.பி.எல்., நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த, 9ல் இரவு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த அறிவுடை நம்பி, திடீரென மயங்கி விழுந்தார். அப்போது, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ