சாலையின் நடுவே மின் கம்பம்அகற்ற மக்கள் வேண்டுகோள்
சாலையின் நடுவே மின் கம்பம்அகற்ற மக்கள் வேண்டுகோள்அரவக்குறிச்சி:அரவக்குறிச்சியில், சாலை நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்றி, ஓரமாக அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட, மூன்றாவது வார்டில் கலைவாணர் தெரு அமைந்துள்ளது. இப்பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்வோர், தமிழ்நாடு மெடிக்கல் பின்புறம் உள்ள சாலையை பயன்படுத்துகின்றனர்.மேலும், அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் இந்த சாலையில் சைக்கிளில் செல்கின்றனர்.ஆனால், சாலை நடுவே மின்கம்பம் அமைந்துள்ளதால், எதிரே வாகனங்கள் வரும்போது நிலை தடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது. சாலையில் நடந்து செல்வோரும் சிரமப்படுகின்றனர். எனவே, சாலை நடுவே இருக்கும் மின் கம்பத்தை ஓரமாக மாற்றியமைத்து தர வேண்டும் என, கலைவாணர் தெரு பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.