உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை ஜோர்

சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை ஜோர்

சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை ஜோர்கிருஷ்ணராயபுரம்:சந்தையூர் வாரச்சந்தையில், நேற்று ஆடு, கோழி விற்பனை ஜோராக நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்சாயத்து, இரும்பூதிப்பட்டி சந்தையூரில் வாரந்தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை கூடுகிறது. காலை நேரத்தில் கூடும் இந்த சந்தையில், ஆடு, கோழி மற்றும் காய்கறிகள் விற்பனை களைகட்டும்.சந்தையூர், இரும்பூதிப்பட்டி, சிவாயம், பஞ்சப்பட்டி, பாப்பகாப்பட்டி, மலையாண்டிப்பட்டி, தேசிய மங்களம், கழுகூர், ஒத்தக்கடை, வளையப்பட்டி, அய்யர்மலை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தங்கள் வீடுகளில் வளர்க்கும் ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில், ஏழு கிலோ ஆடு ஒன்று, 6,000 ரூபாய்க்கும்; நாட்டுக்கோழி கிலோ, 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆடு, கோழிகளை வாங்க உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வந்ததால் வியாபாரம் ஜோராக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ