கிருஷ்ணராயபுரத்தில் மழைசாய்ந்த வாழை மரங்கள்
கிருஷ்ணராயபுரத்தில் மழைசாய்ந்த வாழை மரங்கள்கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரத்தில், நேற்று முன்தினம் இரவு பெய்த காற்று, கன மழையால் வாழை மரங்கள் முறிந்து சேதமாகின.கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, மகாதானபுரம், பிச்சம்பட்டி, திருக்காம்புலியூர், மலைப்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக, தொடர்ந்து கோடை மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. கிருஷ்ணராயபுரம் சுற்று வட்டாரத்தில் மட்டும், 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்துள்ளன.