மேலும் செய்திகள்
தலைமறைவு குற்றவாளிகள் அக்., 22ல் ஆஜராக உத்தரவு
17-Sep-2025
பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு, மொளசி போலீஸ் ஸ்டே ஷனில், கடந்த, 2005ல் நடந்த கொலை முயற்சி வழக்கில், விட்டம்பாளை யம், அம்மன்நகர் புதுவலவை சேர்ந்த சின்னப்பன் மகன் கணேசன், கொக்கராயன்பேட்டை, கோம்பைமேட்டை சேர்ந்த கந்தசாமி மகன் பழனிசாமி, கொக்கராயன்பேட்டை சேர்ந்த கந்தசாமி மகன் சிவலிங்கம் ஆகியோர் ஜாமினில் வந்தனர். மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வருகின்றனர்.இதனால், அவர்களை தேடப்படும் குற்ற வாளியாக அறிவித்து, திருச்செங்கோடு உதவி அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வரும், 26க்குள் திருச்செங்கோடு உதவி அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என, உத்தரவிட்டது. இதுதொடர்பாக கொக்கராயன்பேட்டை பகுதியில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
17-Sep-2025