உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெடுஞ்சாலையில் குப்பைதேங்குவதால் சுகாதார சீர்கேடு

நெடுஞ்சாலையில் குப்பைதேங்குவதால் சுகாதார சீர்கேடு

கிருஷ்ணராயபுரம்:கரூர், திருச்சி நெடுஞ்சாலை சிந்தலவாடி ரயில்வே மேம்பாலத்தின் கீழ்புறம், குப்பைகளை தரம் பிரிக்கும் கிடங்கு உள்ளது. பஞ்சாயத்து பகுதியில் சேகரமாகும் குப்பையை, கிடங்குகளில் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. பின்னர் தரம் பிரிக்கப்பட்டு குப்பை எரீக்கப்படுகிறது. தற்போது கூடுதல் குப்பை தேங்கி இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, சாலையோரம் தேங்கிய குப்பைகளை அகற்ற பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை