இந்திய கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்
கரூர்: கரூர் மாவட்ட இந்திய கம்யூ., கட்சி சார்பில், மாவட்ட செய-லாளர் நாட்ராயன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், நாடு முழுவதும் விலைவாசி உயர்வை மத்திய பா.ஜ., கட்-டுப்படுத்த வேண்டும், சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்-பட்டது.