உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் அனுப்பும் பணி துவக்கம்

இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் அனுப்பும் பணி துவக்கம்

கரூர்: கரூர் மாவட்டத்தில், இந்து முன்னணி சார்பில், பிரதிஷ்டை செய்ய நேற்று விநாயகர் சிலைகள் அனுப்பும் பணி தொடங்கி-யது.இந்துக்களின் முக்கிய திருவிழாவான விநாயகர் சதுர்த்தி விழா இன்று, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவை, வெகு விமர்சையாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.கரூர் மாவட்டத்தில், கரூர் டவுன், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், வேலாயுதம்பாளையம், சின்னதாராபுரம், தோகமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், 200 சிலைகள் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.அதற்காக, வேலாயுதம்பாளையத்தில் கடந்த மாதம், விநாயகர் சிலைகள் செய்யும் பணி தொடங்கியது. நேற்று காலை, கரூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் வகையில், வேலாயுதம்பாளையத்தில் இருந்து, வேன்கள் மூலம் சிலைகளை அனுப்பும் பணி தொடங்கியது.இதுகுறித்து, இந்து முன்னணி நிர்வாகிகள் கூறியதாவது:இந்து முன்னணி சார்பில், வேலாயுதம்பாளையத்தில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள், 200க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று (நேற்று) முதல் வைக்கப்படும். நாளை காலை (இன்று) பூஜைகள் நடத்தப்பட்டு தொடர்ந்து, மூன்று நாட்களில் காவிரி, அமராவதி ஆறுகளில் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை