மானாவாரி நிலங்களில் விதைப்பால் முருங்கை விதைக்கு திடீர் கிராக்கி
கரூர்: கரூர் மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் முருங்கை சாகுபடி அதிகரித்துள்ளது. இதனால், முருங்கை விதைக்கு திடீரென விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.தமிழக அளவில், நெட்டு முருங்கை ரகம், கரூர் மாவட்டம், அர-வக்குறிச்சி வட்டாரத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.குறிப்பாக, சேந்தமங்கலம் கீழ்பாகம், சேந்தமங்கலம் மேல்-பாகம், நாகம்பள்ளி, இனுங்கனுார், மொடக்கூர் மேல்பாகம், மொடக்கூர் கீழ்பாகம், கோவிலுார், சாந்தப்பாடி, தெத்துப்பட்டி, புங்கம்பாடி கீழ்பாகம், புங்கம்பாடி மேல்பாகம், ஈசநத்தம் உள்-பட, 20க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில், 250க்கும் மேற்பட்ட கிராமங்களில், 30,000 ஏக்கர் பரப்பளவில் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. இதில், 8,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். சீசன் காலத்தில், எட்டு டன் முருங்கை அறுவடை செய்யப்படுகிறது.அரவக்குறிச்சி பகுதியில் சாகுபடி செய்யப்படும் செடி முருங்கை, விதை முருங்கை, ஒட்டு ரக முருங்கை ஆகியவற்றின் காய்கள் நீளமாக, திரட்சியுடன் ருசியாக இருக்கும். இதனால், இந்த பகுதி-களில் இருந்து ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த, ஒரு மாத காலமாக பெய்த பருவமழை காரணமாக, மானாவாரி நிலங்களில், முருங்கை உற்பத்தியை அதிகரிக்க விவ-சாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், முருங்கை விதைக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால், விலையும் அதிகரித்துள்ளது.இதுகுறித்து முருங்கை விவசாயிகள் கூறியதாவது: தற்போது பெய்துள்ள தென்மேற்கு பருவ மழை காரணமாக, நிலத்தடி நீர்-மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், முருங்கை சாகுபடி அரவக்கு-றிச்சி வட்டாரத்தில் மீண்டும் துவங்கியுள்ளது.இதனால், விதைக்கு கூடுதல் விலை கிடைக்கிறது. கருப்பு, வெள்ளை நிற விதைகள் கடந்த வாரம், ஒரு கிலோ, 750 ரூபாய் வரை விலை போனது.பொதுவாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் அதிக பனிப்பொ-ழிவு காரணமாக முருங்கை மரங்களில் பூக்கள் உதிர்ந்து விடும், இதனால், சாகுபடி குறைவால், தை மாதங்களில் திருமணம் உள்-ளிட்ட சுப விசேஷங்கள் நடக்கும் போது, முருங்கைக்கு அதிக விலை கிடைக்கும். தற்போது, விதைக்கும் அதிக விலை கிடைக்கும் நிலையில், அடுத்த ஐப்பசி, கார்த்திகை மாதம் முருங்-கைக்கும் கூடுதல் விலை கிடைக்க வாய்ப்புண்டு.இவ்வாறு அவர்கள் கூறினர்.