மேலும் செய்திகள்
தாயை அடித்துக் கொலை செய்த வழக்கில் மகன் கைது
02-Sep-2024
கரூர்: பணம் கேட்டு தராததால் தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், வெங்கமேடு, என்.எஸ்.கே., நகரை சேர்ந்தவர் முருகன், 54; கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம், முருகனிடம் அவரது மகன் சுகேஷ், 27, பணம் கேட்டுள்ளார். ஆனால், முருகன் பணம் தர மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுகேஷ், கூர்மையான ஆயுதம் மூலம், தந்தை முருகனை தாக்கியுள்ளார். அதில், நெஞ்சில் படுகாயமடைந்த முருகன், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகார்படி, சுகேசை வெங்கமேடு போலீசார் கைது செய்தனர்.
02-Sep-2024