திறந்து கிடக்கும் கேட் வால்வு குடிநீர் மாசு ஏற்பட வாய்ப்பு
கரூர்: கரூர் அருகில், கேட் வால்வு திறந்து கிடப்பதால் குடிநீர் மாசு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, வெங்கமேடு அருகில் சின்ன குளித்துபாளையத்தில், பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், கேட்வால்வு அமைக்கப்பட்டு பயன்-பாட்டில் உள்ளது. இந்த கேட்வால்வில் இருந்து, தொடர்ந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டு, அதனை சுற்றி தேங்கி நிற்கிறது. மேலும் கேட்வு வால்வு குழாய் மூடப்படாமல் திறந்து கிடக்கிறது. இதன் வழியாக துாசி கலந்த குடிநீர் அசுத்தமாக வர வாய்ப்பு அதிகம். எனவே, கேட்வால்வு மூட வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்-பார்க்கின்றனர்.