உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தேசிய பசுமை படை சுற்றுச்சூழல் தின விழா

தேசிய பசுமை படை சுற்றுச்சூழல் தின விழா

கரூர்,: தமிழக அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, கரூர் மாவட்ட தேசிய பசுமை படை சார்பில், உலக சுற்றுச்சூழல் தினவிழா, கரூர் பஸ் ஸ்டாண்டில் நேற்று நடந்தது. அதில், மகளிர் குழு உறுப்பினர்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து, உறுதிமொழி எடுத்து கொண்டனர். அதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு மஞ்சள் பை மற்றும் சுற்றுச்சூழல் அவசியம் குறித்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. விழாவில், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி, தேசிய பசுமை படை ஒருங்கி ணைப்பாளர் திருமூர்த்தி, நிர்வாகி கோபால் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை