உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 5 கிலோ அரிசி பைகளை ரேஷனில் வழங்க உத்தரவு

5 கிலோ அரிசி பைகளை ரேஷனில் வழங்க உத்தரவு

கரூர்: தமிழகத்தில், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு, நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக, 5 கிலோ அரிசி பைகளும் தயார் செய்யப்பட்டு, மக்களுக்கு வழங்கப்பட்டன. இதில் மீதமுள்ள, 5 கிலோ பைகளை பொது வினியோக திட்டத்தில், ரேஷன் கடைகளில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை, மண்டல மேலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:அரசு உத்தரவின்படி, உபயோகிக்கப்படாத நிலையில் உள்ள 5 கிலோ நிவாரண அரிசி பைகளை, பொது வினியோக திட்டத்தில் வழங்கலாம். இவற்றை வினியோகம் செய்த பின், பயன்பாட்டு சான்றிதழை தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை