கரூர்: நில அபகரிப்பு புகாரில், கைது செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்-பெக்டரை, மீண்டும் சிறையில் அடைக்க கரூர் நீதிமன்றம் உத்தர-விட்டது. கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்-தவர் பிரகாஷ், 50, தொழில் அதிபர். இவரது மகள் ேஷாபனா பெயரில், கரூர் அருகே குன்னம்பட்டி, தோரணகல்பட்டியில் உள்ள, 22 ஏக்கர் நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் கிரையம் செய்து கொண்டதாக, கரூர் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல்காதர் கடந்த ஜூன், 9ல் கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். அந்த வழக்கில், கரூரை சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பிரவீன் வில்லிவாக்கம் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரித்திவிராஜ், சென்னையை சேர்ந்த சார்லி ஆகி-யோரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.அதில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பிரவீன் ஆகி-யோரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் காவலில் எடுத்து விசாரித்த பிறகு மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர். மேலும், சேலம் மத்-திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரித்திவிராஜை கடந்த, 25ல் கரூர் ஜே.எம்., 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இரண்டு நாள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசார் அனுமதி பெற்றனர். இரண்டு நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில், நேற்று மாலை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கரூர் ஜே.எம்.,-1 நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் பிரித்திவிராஜை ஆஜர்படுத்தினர். வழக்கை நீதி-பதி மகேஷ் விசாரித்து, இன்ஸ்பெக்டர் பிரித்திவிராஜை வரும், 31 வரை சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, பிரித்திவிராஜை சேலம் மத்திய சிறையில் அடைக்க, வேனில் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.