உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தலையில் காயத்துடன் சித்தாள் உடல் மீட்பு

தலையில் காயத்துடன் சித்தாள் உடல் மீட்பு

கரூர் : கரூர் - திண்டுக்கல் சாலையில் சின்னமநாயக்கன்பட்டி பிரிவு டாஸ்மாக் செல்லும் வழியில் வெங்கக்கல்பட்டியில், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு புலியூர் வெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்தாயி, 57, என்பவருடன், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று காலை, 7:00 மணிக்கு முத்தாயி தலையில் ரத்தக் காயத்துடன் சடலமாக கிடந்தார். அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.அவர், அந்த நபரால் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை