உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி வகுப்பு

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி வகுப்பு

கரூர்: மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடக்கும், டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை தேர்வுக்கு பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது என, கலெக்டர் தங்-கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா-வது:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்-படும், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை தேர்வு நடக்க இருக்கிறது. இதற்கான, இலவச பயிற்சி கரூர், மாவட்ட வேலை-வாய்ப்பு அலுவலகத்தில் நடந்து வருகிறது. இதுவரை நடத்தப்-பட்ட பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகளில், ஆயிரக்கணக்-கானோர் பங்கேற்று, பல்வேறு அரசு துறைகளில் பணியிடங்க-ளுக்கு தேர்வு செய்யப்பட்டு, பணி புரிந்து வருகின்றனர். கடந்த 26ல், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் வெளி-யிடப்பட்டதில், இங்கு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட இருவர், தேர்ச்சி பெற்று பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, உரிய முறையில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை