உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனுார் கதவணைக்கு 12,000 கன அடி நீர்வரத்து

மாயனுார் கதவணைக்கு 12,000 கன அடி நீர்வரத்து

கரூர்: கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 12,768 கன அடி தண்ணீர் வந்-தது. காவிரியாற்றில், சம்பா சாகுபடி பணிக்காக வினாடிக்கு, 12,600 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,720 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது.க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 21.78 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்-காலில் வினாடிக்கு, 80 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில், நேற்று காலை, 6:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் மழை இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை