உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / துப்பாக்கியால் சுட்ட வழக்கில் ஒருவர் கைது

துப்பாக்கியால் சுட்ட வழக்கில் ஒருவர் கைது

எருமப்பட்டி: கொல்லிமலை சேலுார் நாடு, சேப்பங்குளம்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணி, 55. இவர் கடந்த ஆக., 28ம் தேதி தனது உறவினரை பார்க்க, எருமப்பட்டி அடுத்த தோட்டம் முடியாம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது, குருவனம் காந்தி என்பரது தோட்டத்திற்கு அருகே செல்லும்போது, அப்பகுதியில் இருந்து நாட்டு துப்பாக்கி வெடித்-தது. இதில், சுப்ரமணி காயமடைந்தார். இது குறித்து எருமப்-பட்டி போலீசார் வழக்கு பதிந்து, துப்பாக்கியை கைப்பற்றி விசா-ரித்து வந்தனர்.இந்நிலையில், துப்பாக்கி உரிமையாளர் கொல்லிமலை சேலுார் நாடு கஸ்பா பகுதியை சேர்ந்த முருகேசன், 52, என்பது தெரிந்-தது. இதையடுத்து எருமப்பட்டி போலீசார், நேற்று முருகேசனை கைது செய்தனர். விசாரணையில் காட்டு பன்றியை சுடுவதற்கு, லோடு செய்து வைத்த நாட்டுத்துப்பாக்கி தவறி வெடித்தது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை