மகாதானபுரம் பஸ் ஸ்டாப்பில் தனியார் பஸ்கள் மோதி விபத்து
கிருஷ்ணராயபுரம்: மகாதானபுரம் பஸ் ஸ்டாப் அருகே, தனியார் பஸ்கள் மோதிய விபத்தில், 17 பேர் காயமடைந்தனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்து மகாதானபுரம் பஸ் ஸ்டாப் உள்ளது. இந்த பஸ் ஸ்டாப்பில், நேற்று காலை, 7:50 மணிக்கு கரூர் பகு-தியில் இருந்து, திருச்சி நோக்கி ஒரு தனியார் பஸ் சென்று கொண்-டிருந்தது. இந்த பஸ்சின் பின்னால், துறையூர் வரை ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த, 2 தனியார் பஸ்களும் மகாதானபுரம் பஸ் ஸ்டாப் வரும்-போது, முந்தி செல்ல முயன்றபோது, 2 பஸ்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இதில், 17 பயணிகள் காயமடைந்-தனர். அவர்களை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.