சுகாதார வளாகம் அருகில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை தேவை
குளித்தலை: சுகாதார வளாகம் அருகே தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.குளித்தலை அடுத்த, மேட்டுமருதுாரில் மூன்றாவது, நான்கா-வது வார்டு பகுதியில் உள்ள பொது கழிவுநீர் வடிகால் மற்றும் குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கீழத்தெருவில் உள்ள பொது சுகாதார வளாகத்தில் இருந்து வெளிவரும் கழிவுநீர், செப்டிக் டெங்க் கழிவு ஆகியவை ஒரே இடத்தில் தேங்கி துர்-நாற்றம் வீசி வருகிறது.இதிலிருந்து பல்வேறு தொற்று நோய் பரவ காரணமாக உள்-ளது. தொடர்ந்து, கழிவுநீர் அங்கிருந்து விவசாய நிலத்தில் கலக்கி-றது. இதனால், நிலத்தில் இறங்கி களை எடுத்தல், அறுவடை செய்தல் பணிகளில் ஈடுபட விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.எனவே, கழிவுநீர் விவசாய நிலத்தில் கலப்பதை தடுக்க, டவுன் பஞ்., நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.