உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்சங்கம் 2வது நாளாக போராட்டம்

அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்சங்கம் 2வது நாளாக போராட்டம்

கரூர், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், நேற்று இரண்டாவது நாளாக, கரூர் கலெக்டர் அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டம் நடந்தது.தமிழகம் முழுவதும், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், நேற்று முன்தினம் காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும், கூடுதல் பொறுப்பு மையங்களை கவனித்து கொள்ள மாதம், 5,000 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.நேற்று இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நீடித்தது. மாவட்ட தலைவர் பத்மாவதி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி