மேலும் செய்திகள்
விருதுநகரில் காத்திருப்பு போராட்டம்
03-May-2025
கரூர், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், நேற்று இரண்டாவது நாளாக, கரூர் கலெக்டர் அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டம் நடந்தது.தமிழகம் முழுவதும், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், நேற்று முன்தினம் காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும், கூடுதல் பொறுப்பு மையங்களை கவனித்து கொள்ள மாதம், 5,000 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.நேற்று இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நீடித்தது. மாவட்ட தலைவர் பத்மாவதி உள்பட பலர் பங்கேற்றனர்.
03-May-2025