அண்ணா பல்கலை பயிலரங்கு அரசு கல்லுாரி மாணவர் தேர்வு
திருப்பூர்: சென்னை, அண்ணா பல்கலையில் நடக்கும் பயிலரங்கில் பங்-கேற்க, அரசு கல்லுாரி மாணவர் தேர்வாகியுள்ளார்.நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், சென்னை, அண்ணா பல்க-லையில், இன்று முதல் வரும், 23ம் தேதி வரை 'சமூக வலைத-ளங்களுக்கு அடிமையாகும் இளைஞர்களை காப்பது' எனும் தலைப்பில் பயிலரங்கம் நடக்கிறது.இதில், 120 மாணவர்கள் பங்கேற்கின்றனர். பயிலரங்கில் பங்-கேற்க கோவை பாரதியார் பல்கலையில் இருந்து ஒன்பது பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, வணிகவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவர் விஸ்வபாரதியும் ஒருவர். தேர்வாகிய மாணவரை கல்-லுாரி முதல்வர் கிருஷ்ணன், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, அலகு - 2 திட்ட அலுவலர் மோகன் குமார், வணிகவியல் துறைத்தலைவர் அமிர்தராணி உட்பட பலர் பாராட்டி, வழியனுப்பினர்.