மா.திறனாளி உறுப்பினர் நியமனம்: 31 வரை அவகாசம்
கரூர்: -உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனா-ளிகள் உறுப்பினர் நியமனம் செய்வதற்கு விண்-ணப்பிக்க, வரும், 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்ட திருத்தப்படி, நகர்ப்புற உள்ளாட்சிகளில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளி நபர்க-ளிடமிருந்தும், அவர்கள் தொடர்புடைய பொது நல சங்கங்களிடமிருந்தும் விண்ணப்பம் செய்ய நிர்-ணயிக்கப்பட்ட கடைசி நாள், வரும், 31 வரை நீட்-டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, டவுன் பஞ்., நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் வசித்து வரும் தகுதியான மாற்றுத்திறனாளிகள், ஏற்க-னவே வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கைகளின்-படி, தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் கமிஷனர்களிடம், வரும், 31 மாலை, 3:00 மணிக்குள், தங்களின் விண்ணப்பங்களை அளிக்-கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.