மேலும் செய்திகள்
லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை
30-May-2025
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, வல்லம், வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர்.வாய்க்கால் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. வெற்றிலை பறிக்கப்பட்டு லாலாப்பேட்டை வெற்றிலை கமிஷன் மண்டிகளுக்கு கொண்டு வந்து விற்று வருகின்றனர். 100 வெற்றிலை கொண்ட ஒரு கவுளி, 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 100 கவுளி கொண்ட ஒரு மூட்டை 5,000 ரூபாய்க்கு விற்பனையானது.வெற்றிலைகள் மொத்தமாக வியாபாரிகள் வாங்கி, சில்லரை விற்பனைக்காக திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், வேலுார் ஆகிய பகுதிகளில் கொண்டு சென்று விற்கப்படுகிறது. இந்த மாதம் முழுவதும், வெற்றிலை சீரான விலையில் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
30-May-2025