உயர்மட்ட பாலத்தில் கிளைகள் பாலம் சேதம் அடையும் அபாயம்
கரூர்: கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் பக்கவாட்டு சுவரில், மரக்கிளைகள் முளைத்துள்ளது. இதனால், பாலம் சேதம் அடையும் நிலை உள்ளது. ஈரோடு-கரூர் ரயில்வே வழித்தடத்தின் குறுக்கே, மதுரை தேசிய நெடுஞ்சாலையில், அரிக்காரம்பாளையம் பிரிவில், உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. அதன் வழியாக, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களான கன்னியாகுமரி வரை, பஸ், லாரி உள்-ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், பாலத்தின் பக்க-வாட்டு சுவரில் பல இடங்களில், ஆலமரம், அரச மரத்தின் கிளைகள் முளைத்துள்ளது. தற்போது, கரூரில் மழை பெய்துள்-ளதால், கிளைகளில் இலைகள் அதிகளவில் துளிர்த்துள்ளது. இதனால், பாலத்தின் உறுதி தன்மை கேள்வி குறியாக உள்ளது. மேலும், அரசமரம், ஆலமரத்தின் வேர்கள், கட்டடத்தை ஊடு-ருவி செல்லும். எனவே, பாலத்தின் முளைத்துள்ள மரக்கிளை-களை அகற்ற, தேசிய நெடுஞ் சாலை துறை அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.