உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சுற்றித்திரியும் புள்ளி மான்களை கடவூர் வனப்பகுதியில் விடலாமே

சுற்றித்திரியும் புள்ளி மான்களை கடவூர் வனப்பகுதியில் விடலாமே

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, பாலப்பட்டி பகுதி வழியாக புங்-காற்று நெடுகை செல்கிறது. இதில் தற்போது, அதிகமான செடிகள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. இந்த இடத்தில், கடவூர் வனப்பகுதியில் இருந்து, வழி தவறி வந்த புள்-ளிமான்கள் சுற்றி வருகிறது. நேற்று முன்தினம் பாலப்பட்டி சாலை விவசாய தோட்டங்களில், மூன்று மான்கள் சுற்றித்திரிந்-தன. மேலும் கால்நடைகள் மேய்ப்பவர்கள் வருவதை பார்த்-ததும், மான்கள் வேகமாக ஓடி அருகில் உள்ள முள் காடுகளில் புகுந்து விடுகிறது. மேலும், சாலை பகுதிகளில் நடமாடும்-போது, நாய்கள் மான்களை துரத்தும் நிலை ஏற்படுகிறது. எனவே, பாலப்பட்டி காட்டுப்பகுதிகளில் சுற்றித்திரிந்து வரும் மான்களை, கடவூர் வனப்பகுதியில் கொண்டு விடுவதற்கான நட-வடிக்கையை வனத்துறை நிர்வாகம் எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ