உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கல்லுாரி மாணவனை தாக்கிய இருவர் மீது வழக்கு; ஒருவர் கைது

கல்லுாரி மாணவனை தாக்கிய இருவர் மீது வழக்கு; ஒருவர் கைது

குளித்தலை: கல்லுாரி மாணவனை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.குளித்தலை அடுத்த, நாகனுார் பஞ்., மணச்சனம்பட்டி காலனியை சேர்ந்தவர் பழனிசாமி, 43, கூலித்தொழிலாளி. இவரது, 17 வயது மகன், நாகனுாரை சேர்ந்த தொழிலாளியின் மகளை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். தகவலறிந்த பள்ளி நிர்வாகம் இருவருக்கும் 'டிசி' வழங்கியது. இதையடுத்து சிறுமி பாலவிடுதி அரசு பள்ளியிலும், சிறுவன் தொட்டியம் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியிலும் படித்து வந்தனர்.இந்நிலையில் சிறுமி, தனது காதலனுக்கு போன் செய்து, 'என்னை கட்டாய திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர். நீ வந்து அழைத்து செல், இல்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்' என, போன் மூலம் தகவல் கொடுத்தார். இதையடுத்து கடந்த, 11 இரவு தனது காதலியை நேரில் பார்த்து பேச, சிறுவன் வந்தார். அப்போது, சிறுமியின் தந்தை மாணிக்கம், 53, அவரது உறவினர் நாகனுார் பஞ்., முன்னாள் தலைவர் லதாவின் கணவர் ராஜா, 42, ஆகியோர், சிறுவனை மரத்தில் கட்டி வைத்து, இரும்பு சங்கிலி, தடியால் தாக்கி படுகாயம் ஏற்படுத்தினர்.தகவலறிந்த சிறுவனின் தந்தை பழனிசாமி, சிறுவனை மீட்டு மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். பின், பழனிசாமி கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் ஏழு பிரிவுகள் கீழ் வழக்கு பதிந்து மாணிக்கத்தை கைது செய்தனர். ராஜாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை