மேலும் செய்திகள்
குழாய் உடைந்து ரோட்டில் ஓடும் குடிநீர்
25-Oct-2024
கரூர்: 'புலியூரில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பொதுமக்கள் வலியுறுத்து-கின்றனர். கரூர் மாவட்டம், புலியூர் டவுன் பஞ்சாயத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கட்டளை காவிரி ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு அதிலிருந்து குழாய் மூலம் புலியூர் சுற்றியுள்ள பல்வேறு ஊர்க-ளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில், புலியூரில் காவிரி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதுபோல், வீணாக தண்ணீர் செல்வதால், அழுத்தம் குறைந்து மேடனா பகுதிக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகி-றது.சாலையில் தேங்கும் நீர் மீண்டும் குழாய் வழியாக உள்ளே செல்-கிறது. இதனால், குடிநீர் மாசடைந்து, பொதுமக்களுக்கு மலே-ரியா, டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் பரவும் அபாயம் உள்-ளது. எனவே, சுகாதாரமான குடிநீர் கிடைக்க உறுதி செய்யும் வகையில் உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்-ளனர்.
25-Oct-2024