உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சந்தையூர் வார சந்தையில் கோழிகள் விற்பனை மும்முரம்

சந்தையூர் வார சந்தையில் கோழிகள் விற்பனை மும்முரம்

கிருஷ்ணராயபுரம்: சந்தையூர் வார சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை விறுவி-றுப்பாக நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்சாயத்து இரும்பூதிப்-பட்டி சந்தையூரில் வார சந்தை சனிக்கிழமை தோறும் செயல்படு-கிறது. நேற்றைய சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை நடந்தது. குறிப்பாக நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விவசா-யிகள், வியாபாரிகள் அதிகளவு ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.இதில், 7 கிலோ கொண்ட ஆடு ஒன்று, 7,200 ரூபாய், நாட்டுக்-கோழி கிலோ, 500 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று மட்டும், 1,000க்கும் மேற்பட்ட கோழிகள், 50க்கும் அதிகமான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.ஆடு, கோழிகளை வாங்க குளித்தலை, தோகைமலை, முசிறி, லாலாப்பேட்டை, பஞ்சப்பட்டி, சேங்கல், சிவாயம், தேசிய மங்-களம், அய்யர்மலை பகுதிகளில் இருந்து வியாபாரிகள், பொது-மக்கள் வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை