உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கட்டட தொழிலாளி மயங்கி விழுந்து பலி

கட்டட தொழிலாளி மயங்கி விழுந்து பலி

கரூர்; கரூர் மாவட்டம், பாலவிடுதி குருப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ், 52; கட்டட தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், புதிய கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பால்ராஜூக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். அப்போது, அருகில் இருந்தவர்கள் பால்ராஜூவை, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால், பால்ராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து, பால்ராஜின் மனைவி மாரியாயி, 48, அளித்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை