மேலும் செய்திகள்
இணைப்பு பாலம் சேதம்; வாகன ஓட்டுநர்கள் தவிப்பு
31-Aug-2024
வாய்க்கால் பாலத்தில் விரிசல்: சிமென்ட் கலவை பூச்சுகிருஷ்ணராயபுரம், செப். 26-மாயனுார் தென்கரை பாசன வாய்க்கால் நடுவே உள்ள பாலத்தின் சாலையில் விரிசலால், சிமென்ட் பூச்சு மூலம் சரி பார்க்கும் பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் தென்கரை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் நடுவே, ரயில்வேகேட் சாலை முதல் அம்மா பூங்கா வரை செல்லும் சாலையில், புதிய பாலம் சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த சாலை வழியாக அம்மா பூங்கா, காவிரி கதவணை, மீன் மார்க்கெட் ஆகிய இடங்களுக்கு வாகனங்களில் செல்கின்றனர்.இந்நிலையில் பாலத்தின் சாலை நடுவில் சிறிய அளவிலான விரிசல் உள்ளது. இந்த விரிசல் காரணமாக சாலை வழியாக வாகனங்கள் செல்லும் போது பாலம் பழுது ஏற்படும் நிலை உள்ளது. இதனை தடுக்கும் வகையில் நீர்வளத்துறை சார்பில் புதிய பாலம் நடுவில் உள்ள சிறிய விரிசல்களை கண்டறிந்து சிமென்ட் கலவை கொண்டு பூசும் பணி நடந்தது. இந்த பணிகளில் நீர்வளத்துறை நிர்வாகத்தினர் பார்வையிட்டனர்.
31-Aug-2024