கரூர்-கோவை சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி
கரூர், கரூர்-கோவை சாலை, பல மாதங்களாக சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர்-கோவை சாலையில் தனியார், அரசு பள்ளிகள், ஓட்டல்கள், டீ கடைகள், கூட்டுறவு வங்கி மற்றும் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இதனால், கோவை சாலை பிரிவு முனியப்பன் கோவில் பகுதியில், போக்கு வரத்து சீராக செல்ல பல மாதங்களுக்கு முன், வேகத்தடைகள் அமைக்கப்பட்டது. தற்போது, வேகத்தடையையொட்டியுள்ள சாலை, சேதம் அடைந்துள்ளது.அதை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் கரூர் போக்குவரத்து போலீசார் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதனால், அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறிய அளவிலான விபத்துகள் ஏற்படுகிறது.எனவே, கரூர்-கோவை சாலை முனியப்பன் கோவில் அருகே, வேகத்தடை பகுதியில், சேதமடைந்த சாலையை, உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.