மேலும் செய்திகள்
சாலையில் பாதியை காணோம் 20 ஆண்டாக கவலைக்கிடம்
06-Oct-2024
கரூர், நவ. 2-கரூர், காந்திகிராம த்தில் சிறு பாலம் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர், திருச்சி சாலையில் தெற்கு காந்திகிராமம் இந்திராநகர் பிரிவு சாலை செல்கிறது. சாலையின் குறுக்கே, மழைநீர் வடிகால் தண்ணீர் செல்ல வசதியாக சிறுபாலம் உள்ளது.பாலத்தின் மேல் பகுதி சேதம் அடைந்துள்ளது. இணைப்பு சாலையில் போடப்பட்ட, சிமென்ட் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால், கான்கிரீட் கம்பிகள் வெளியில் நீட்டி கொண்டுள்ளன. அந்த சாலை வழியாக, ஏராளமான வாகனங்கள் செல்வதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.குறிப்பாக, இரவு நேரத்தில் சிறுபாலத்தில் தவறி விழுவோருக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. டூவிலர்களின் டயர்கள் பஞ்சராகி வருகிறது. எனவே, சாலையின் குறுக்கே உள்ள சிறுபாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
06-Oct-2024