உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

குளித்தலை, குளித்தலை அடுத்த, பரளி கிராமத்தை சேர்ந்த, 15 வயது சிறுமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்- 1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல் பள்ளிக்கு சென்றவர், மாலையில் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடி விசாரித்தும் எந்த வித தகவலும் கிடைக்கவில்லை. மகளை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ