உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை நவ.,15 வரை விண்ணப்பிக்க அவகாசம்

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை நவ.,15 வரை விண்ணப்பிக்க அவகாசம்

கரூர், இளம் சாதனையாளர்களுக்கான, பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வரும், 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இளம் சாதனையாளர்களுக்கான, பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில், பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது. 2025-----26ம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம், 2.5 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். வரும், 15 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்தை சரிபார்க்க வரும், 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் https://scholarships.gov.inசென்று, 2026ம் ஆண்டிற்கான விண்ணப்பத்தை புதுப்பித்தல் செய்து கொள்ளலாம்.புதிதாக விண்ணப்பிக்க விரும்பும், 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர், தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் தங்களது மொபைல் எண், ஆதார் விபரங்களை உள்ளீடு செய்வதுடன், உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி