தான்தோன்றிமலை கோவில் அருகில் அன்னதானம் வழங்கல்
கரூர்: புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு, கரூர் தான்-தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் அருகே, தனியார் திருமண மண்டபத்தில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கரூர் தி.மு.க., எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி அன்-னதானத்தை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், மண்-டல தலைவர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.