கரூர் ரயில்வே ஸ்டேஷனில் கோட்ட மேலாளர் ஆய்வு
கரூர், கரூர் ரயில்வே ஸ்டேஷனில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் நேற்று ஆய்வு செய்தார்.கரூர் ரயில்வே ஸ்டேஷனில், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பன்னாலால், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு செய்தார். அப்போது, கரூர் ரயில்வே ஸ்டேஷனில் நடந்து வரும் அம்ரித் பாரத் திட்டப்பணிகளை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது, சேலம் ரயில்வே கோட்டம் மற்றும் கரூர் ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிகள் உடனிருந்தனர்.