மேலும் செய்திகள்
புளியம்பட்டி சந்தையில் ஆடு விற்பனை மந்தம்
20-Dec-2024
கிருஷ்ணராயபுரம், டிச. 22-கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்சாயத்து இரும்பூதிப்பட்டியில், சந்தையூர் வாரச்சந்தை செயல்படுகிறது. நேற்று கூடிய சந்தையில் காலை நேரங்களில் ஆடு, கோழிகள் மற்றும் காய்கறிகள் விற்கப்பட்டன. கடந்த ஒரு மாதமாக சந்தையில் ஆடு, கோழி விற்பனை மந்த நிலையில் இருந்தது. கார்த்திகை, மார்கழி மாதம் என்பதால் சபரிமலை செல்லும் பக்தர்கள் காரணமாக ஆடு கோழி விற்பனை மந்த நிலையில் இருந்தது.இந்நிலையில், நேற்று கூடிய சந்தையில், 7 கிலோ கொண்ட ஆடு ஒன்று, 6,500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 100 ஆடுகள் விற்கும் சந்தையில், 50 ஆடுகள் மட்டுமே விற்பனை செய்வதற்காக விவசாயிகள் கொண்டு வந்தனர். மேலும் நாட்டுக்கோழி கிலோ, 450 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆடு, கோழிகள் வாங்க லாலாப்பேட்டை, பஞ்சப்பட்டி, கரூர், சேங்கல், புலியூர், குளித்தலை, தோகைமலை பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.
20-Dec-2024