உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோவை சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீரால் ஓட்டுனர்கள் அவதி

கோவை சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீரால் ஓட்டுனர்கள் அவதி

கரூர், கரூர் அருகே சாலையில், கழிவுநீர் நேற்று ஆறாக ஓடியது. இதனால், பொது மக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.கரூர்-கோவை சாலை மின்வாரிய அலுவலகம் எதிரே, குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. ஆனால் அப்பகுதியில் உள்ள, சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை, சரி செய்யக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்தும், மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யாமல், அலட்சியமாக உள்ளது. இந்நிலையில், கரூர்-கோவை சாலை மின்வாரிய அலுவலகம் எதிரில், பல நாட்களாக சாக்கடை கால்வாயில் இருந்த கழிவுநீர் நேற்று வெளியேறி, சாலையில் ஆறாக ஓடியது. அப்போது, துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. சாக்கடை கால்வாயில் இருந்து, கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி