உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மோசமான சாலையால் ஓட்டுனர்கள் அவஸ்தை

மோசமான சாலையால் ஓட்டுனர்கள் அவஸ்தை

கிருஷ்ணராயபுரம் :சிந்தலவாடி பஞ்சாயத்து, மகிளிப்பட்டி பகுதியில் இருந்து நந்தன்கோட்டை வரை செல்லும் சாலையை, விவசாயிகள் அதிகளவு பயன்படுத்துகின்றனர். சாலை அருகில் உள்ள விவசாய நிலங்களில் விவசாயிகள் வாழை, வெற்றிலை, சோளம் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். விளை பொருட்களை இந்த சாலையில் கொண்டு செல்ல முடியாமல், விவசாயிகள் அவதியுறுகின்றனர். சாலையின் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து, மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தார்ச்சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி