மேலும் செய்திகள்
பைக் மோதி முதியவர் பலி
1 hour(s) ago
கரூர் பைக் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் இறந்தார்.கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகில் புஞ்சைகாளக்குறிச்சி எல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் மணி, 60. இவர், நேற்று முன்தினம் நொய்யல் - க.பரமத்தி சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, கிரஷர் மேடு அருகில் எதிரே வந்த கார் மோதியது. இதில் நிலை தடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து, க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 hour(s) ago