உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தீயணைப்பு நிலையம் சார்பில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி

தீயணைப்பு நிலையம் சார்பில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி

கரூர், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் பொருட்டு, புகழூர் தீயணைப்பு நிலையம் சார்பில், பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி முகாம், புகழூர் நகராட்சி காந்தியார் நடுநிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.தென்னிந்திய பகுதிகளான தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக, இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்திலும், தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், வடகிழக்கு பருவமழையின் போது, வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில், வெள்ளத்தில் சிக்கியவர்களை, மீட்கும் வகையில் செயல்படுவது குறித்து, கரூர் அருகே புகழூர் தீயணைப்பு நிலையம் சார்பில், ஒத்திகை பயிற்சி முகாம் புகழூர் நகராட்சி காந்தியார் நடுநிலைப்பள்ளியில் நடந்தது. அதில், புகழூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன், தலைமையாசிரியை தமிழரசி மற்றும் தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை