மேலும் செய்திகள்
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை ஜோர்
03-Nov-2025
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளதுஇந்த கதவணையில் காவிரி நீர் சேமிக்கப்படுகிறது. அதில் வளர்க்கப்படும் மீன்களை, மாயனுார் பகுதியை சேர்ந்த உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று பிடித்துக்-கொண்டு வந்து கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்-பனை செய்கின்றனர்.தற்போது, காவிரி ஆற்றில் நீர்வரத்து சீராக இருப்பதால், புது மீன்கள் வருகிறது. இதில் அதிகமாக ஜிலேபி மீன் கிடைக்கிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால், மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. ஜிலேபி மீன் கிலோ, 150 ரூபாய், கெண்டை, 100 ரூபாய், விரால், 650 ரூபாய், பாறை, 200 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. நேற்று, 400 கிலோ வரை மீன் விற்பனை நடந்தது.
03-Nov-2025