மாயனுார் கதவணையில் மீன்கள் விற்பனை சுறுசுறு
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே, கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் சேமிக்கப்-படும் நீரில், மீன்கள் வளர்க்கப்படுகின்றன. அந்த மீன்களை, மீன-வர்கள் பரிசலில் சென்று பிடித்துவந்து கரையில் வைத்து விற்-பனை செய்து வருகின்றனர்.இதில், ஜிலேபி மீன் கிலோ, 140 ரூபாய், கெண்டை மீன், 100 ரூபாய், விரால், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்-படுகிறது. கரூர், குளித்தலை, லாலாப்பேட்டை, திருக்காம்பு-லியூர், பஞ்சப்பட்டி, சேங்கல், புலியூர், மணவாசி, கிருஷ்ணராய-புரம் பகுதிகளை சேர்ந்த மக்கள், மீன்களை வாங்கி சென்றனர். நேற்று, 300 கிலோ மீன்கள் விற்பனை செய்யப்பட்டதாக மீன-வர்கள் தெரிவித்தனர்.