கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டாஸ்
கரூர்: லாலாப்பேட்டை அருகே நடந்த, கொலை வழக்கில் கைதான வாலிபர், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ், 36. இவர் கடந்தாண்டு டிச., 16ல், லாலாப்பேட்டை இரட்டை வாய்க்கால் அருகே, முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கு தொடர்பாக, ராமநாதபுரம் மாவட்டம், பண்ணைவயல் பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார், 30, என்பவரை லாலாப்பேட்டை போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், ரஞ்சித் குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, கலெக்டர் தங்கவேலுவுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, ரஞ்சித் குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகலை, லாலாப்பேட்டை போலீசார் நேற்று திருச்சி மத்திய சிறையில் உள்ள ரஞ்சித் குமாரிடம் வழங்கினர்.