மனிதநேய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்
கரூர்: கரூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், மாவட்ட தலைவர் ேஷக் இஸ்மாயில் தலைமையில், தெற்கு காந்தி கிராமம் சக்தி நகர் பள்ளிவாசல் முன், நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், காஸா மக்கள் மீது, இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்-டித்தும், இஸ்ரேல் நாட்டை ஐ.நா., சபை கட்டுப்படுத்த வேண்டும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்-வாகிகள் பலர் பங்கேற்றனர்.