உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே ஆண்டிபட்டிக்கோட்டை பகுதியில், சட்ட விரோதமாக மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.ஆண்டிபட்டிக்கோட்டை பகுதியில், அரவக்குறிச்சி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் திண்டுக்கல் மாவட்டம், கே.அத்திக்கோம்பை பகுதியை சேர்ந்த மயில்சாமி மகன் மகேஸ்வரன், 46, என்பவர் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து அரவக்குறிச்சி போலீசார், மகேஸ்வரனை கைது செய்தனர். அவரிடமிருந்து, 4,680 ரூபாய் மதிப்புள்ள, 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை