உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் மனைவி, குழந்தை கழுத்தறுத்து கொலை கணவர் தற்கொலை முயற்சி

கரூரில் மனைவி, குழந்தை கழுத்தறுத்து கொலை கணவர் தற்கொலை முயற்சி

கரூர்: கரூர் அருகே மனைவி, குழந்தையை கொன்று விட்டு, கணவர் தற்கொலைக்கு முயன்றார்.கரூர் மாவட்டம், வெங்கமேடு வி.வி.ஜி., நகர் கலைஞர் சாலையை சேர்ந்தவர் செல்வ கணேஷ், 48; டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளி. இவருக்கு, பல ஆண்டுகளாக உடல்நலக்குறைவு உள்ளது.இதனால் மனம் உடைந்து காணப்பட்ட செல்வ கணேஷ், அவரது மனைவி கல்பனா, 40, இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் கல்பனா கர்ப்பமாக இருந்தார்.நேற்று காலை தம்பதியர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்-ளது. அப்போது, ஆத்திரமடைந்த செல்வ கணேஷ், மனைவி கல்பனா, மகள் சாரதி பாலா, 6, ஆகியோரின் கழுத்தை கத்-தியால் அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர், கொசு விரட்டி மருந்தை குடித்து விட்டு, செல்வ கணேஷ் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். இதுகுறித்து, அருகில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ், இன்ஸ்பெக்டர் மணிமாறன், எஸ்.ஐ., ஆர்த்தி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கல்பனா, சாரதி பாலா ஆகியோரது உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.உயிருக்கு போராடி கொண்டிருந்த செல்வ கணேைஷ, வெங்க-மேடு போலீசார் கைது செய்து, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி