உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகழூர் தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட உதவி அலுவலர் ஆய்வு

புகழூர் தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட உதவி அலுவலர் ஆய்வு

கரூர்: புகழூர் தீயணைப்பு நிலையத்தில், மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் கோமதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் - திருக்காடுதுறை அருகே, புகழூர் தீயணைப்பு நிலையம் செயல்படுகிறது. அதில், கரூர் மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் கோமதி திடீ-ரென ஆய்வு பணியை மேற்கொண்டார். அப்போது, தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வாகனம், தளவாட பொருட்கள், பாது-காப்பு உபகரணங்கள், தீ விபத்து மீட்பு பணி விபரங்களை கேட்-டறிந்து, பதிவேடுகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா என, விளக்கம் கேட்டறிந்தார். அப்போது, புகழூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் உடனி-ருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ